பொள்ளாச்சி, அக்.3- பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணி அம் மன் கோவில் முன்பு உள்ள தனியார் தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனை மலை மாசாணி அம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியின் கீழ்பகுதி தளத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கும் விடுதிக்கு அருகில் குப்பையை எரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடு பட்டுள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீயானது மளமளாவென பரவத்தொடங்கி, வங்கியின் ஏடிஎம் இயந்திரத்திற்கும் பரவியது. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், தங் கும் விடுதி மற்றும் ஏடிஎம் இயந்திரம் சேதாரமடைந்தது. மேலும், தீயானது வங்கியினுள் செல்லாமல் தடுக்கப் பட்டது.