அவிநாசி, ஜூன் 10- அவிநாசி அடுத்த ஒச்சாபாளையத்தில் அரசு ஆரம்பப்பள்ளி முன்பு மழைநீர் தேங்கி பள்ளி செல்லும் மாணவர்கள் அவதிக்குள்ளாவதால் உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சிக்குட்பட்ட ஒச்சாபாளையம் ஏடி காலனி குடியிருப்பு அருகில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி நுழைவாயில் அருகில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல குழந்தைகளுக்கு மிக வும் சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக் கின்றனர். எனவே பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் செல்லாத வகையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.