tamilnadu

img

சேலத்தில் இளம்பெண் மர்ம சாவு காவல்துறையினர் விசாரணை

சேலம், செப். 23- சேலத்தில் தங்கி மசாஜ் சென்டரில் பணி யாற்றி வந்த மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சேலம் அத்வைத ஆசி ரமம் சாலை அருகில் உள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றில் தி  ராயல் ஹெல்த் ஸ்பா என்ற மசாஜ் சென்டர் இயங்கி வரு கிறது. இங்கு மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.  இவர்கள் அதே தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து  வருகிறார்கள். இந்நிலையில் ஞாயிறன்று இரவு அனைவரும் வழக்கம்போல் உறங்க சென்றுள்ளனர். இதன்பின் திங்களன்று காலை அனைவரும் எழுந்து  பார்த்தபோது எஸ்தர் (28) என்ற இளம்பெண் மட்டும் எழாமல் இருந்துள்ளார். இதையடுத்து மற்ற பெண் கள் அவரை எழுப்பி பார்த்த நிலையில், அவர் உயிரி ழந்து கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் மசாஜ் சென்டர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்த னர். அவர் விரைந்து வந்து எஸ்தரின் உடலை பார்த்து  பிறகு இதுகுறித்து அழகாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.  இதையடுத்து காவல் ஆய்வா ளர் செந்தில் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பால சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத் திற்கு வந்து சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து மிசோரம் மாநிலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மேலும்,  அவருடன் பணியாற்றி வந்தவர்களிடம் காவல்துறை யினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

;