tamilnadu

img

இந்தி பாடகர் பெயரில் போலி முகநூல் பெண்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்தவர் கைது

கோவை, மே 29–இந்தி பாடகர் பெயரில் போலி முகநூல் உருவாக்கி பெண்களிடம் பழகி அதனை ஆதாரமாக வைத்து மிரட்டி பணம் பறித்த மோசடி ஆசாமியை கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் புதனன்று கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திரவர்மன். இவர் அர்மன்மாலிக் என்கிறஇந்தி பாடகரின் பெயரில் போலி முகநூல் உருவாக்கியுள்ளார். இதில்அர்மன்மாலிக்கை போன்றே அவரின் பாடல்கள், ஆல்பம் மற்றும் அவரின் படங்களை தொடர்ந்து அதில் பதிவிட்டு முகநூல் நட்புகளை சேர்த்தியுள்ளார். இந்த முகநூல் மூலம் நண்பர்களான பெண்களிடம் தான்தான் அர்மன் மாலிக் என நம்பவைத்து செல்போன் எண்களை பெற்றுள்ளார். இதனையடுத்து தொடர்ந்து காதல் மொழியில் பேசி பெண்களிடம் வாட்ஸ் எண்ணில் அந்தரங்க புகைப்படங்களை பெற்றுள்ளார்.இதனையடுத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம் பறித்து வந்துள்ளார். பணம் தரமாட்டேன் என்ற பெண்களிடம் அவர்களுடைய அந்தரங்க ஆபாச படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என்று மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோன்று பணம் பறித்து உள்ளார். இதில் பாதிக்கப்பட்ட கோவை சூலூரை சேர்ந்த பெண் சமீபத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.இதனையடுத்து கோவை குற்றப்பிரிவு காவல்துறையினர் அந்த முகநூலை இயக்குபவர் யார் என்பது குறித்து ரகசியமாக விசாரனை நடத்தி வந்தனர். இதில் சம்மந்தப்பட்ட நபர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த மகேந்திர வர்மன் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதன்பின் பாதிக்கப்பட்ட சூலூர் பெண்ணை மகேந்திர வர்மனிடம் பேச வைத்து பணம் தருவதாக சொல்லச்சொல்லி கோவை வந்துபெற்றுக்கொள்ளுமாறு  தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து கோவை வந்த மகேந்திர வர்மனைகாவல்துறையினர் பிடித்து அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும்டேப்லெட் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர். பின்னர் அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.