tamilnadu

பள்ளியில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு

உதகை, ஜூலை 12- பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண் மற்றும் மின்னஞ் சல் முகவரியுடன் மதிப்பெண் சான்று பெறும் பள்ளிகளில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு செய்யலாம். ஜூலை 24ஆம் தேதி வரை  இப்பணி நடைபெறும். மேலும் http://tnvelaivaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்யலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் விடுத்த செய்திக்குறிப்பில் கூறி யுள்ளார்.