tamilnadu

குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு

நாமக்கல், ஜூலை 1- நாமகிரிப்பேட்டை அருகே தொப்பபட்டியில் நான்கு மாத காலமாக நிலவும் குடிநீர் பற்றாக் குறையைப் போக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன் றியத்தில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. குறிப்பாக தொப்பப்பட்டி ஊராட்சி யில் இப்பகுதியில் 800 க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். அப்பகுதியில் முனியப் பன்கோவில், அங்கன்வாடி பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்த நிலையில், கடந்த நான்கு மாத காலமாக இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பல முறை அப்பகுதி மக்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை.  இந்நிலையில், விவசாய தொழிலாளர் சங்க ஒன் றிய பொருளாளர் இ.குப்பண்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.