tamilnadu

img

வாக்குரிமை கேட்டு வட்டாட்சியரிடம் மனு

அவிநாசி, நவ. 20- அவிநாசியில்  பேரூராட்சியில் வார்டு சீரமைப்பில் ஏற்பட்ட குளறு படியால் வாக்குரிமையை இழந்த வர்கள் வட்டாட்சியரிடம் முறையீடு செய்தனர். உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு மறுவரையறை செய்யப்பட்ட வாக்கா ளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது. இதில் அவிநாசி பேரூராட்சி 11ஆவது வார்டு காமராஜ் வீதியில் வசிக்கும்  ஒரே குடும்பத்தில் உள்ள வாக்காளர்களில் பலர் 7 ஆவது வார்டு வி.எஸ்.வி. காலனிக்கு மாற்றப்பட் டுள்ளனர்.  இதேபோல் ஏராளமான வாக்காளர்கள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு வார்டு சீரமைப்பில் நடைபெற்றுள்ள குளறுபடிகளைக் களைந்து, முன்பு இருந்ததைப் போல 11 ஆவது வார் டில் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மூன்று  முறை மனுக்கள் கொடுக்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கமராஜர் வீதி வாக்காளர்களை நீக் கம் செய்து விட்டதாகக் கூறப்படு கிறது. எனவே, மீண்டும் குளறுபடி தொடர்வதால் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்குரிமை உறுதிசெய்ய வேண்டி வட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.