உதகை, அக்.21- உதகையில் மழையால் சேதம் அடைந்த வீடுகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் ஏற்பட்ட மழையால் உதகை காந்தல் கஸ்தூரிபாய் கால னியில் உள்ள வீடுகள் மிகுந்த சேதம் அடைந்தது. சேதம் அடைந்த வீடு களை ஆய்வு செய்த அதிகாரிகள் மாற்று இடம் தருவதாகவும், சேதம் அடைந்த வீடுகளை சீரமைத்து தரு வதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் குழந்தைகளுடன் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வரு கின்றனர். எனவே இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உரிய இழப்பீடும், மாற்று இடமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெரும் அளவில் தலித் மக்கள் வாழும் இப்பகுதியில் ஆங் கில அரசு காலத்தில் தரப்பட்ட பஞ் சமி நிலங்கள் பலவும் பிற சமூக மக்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. எனவே, பஞ்சமி நிலங் களை அடையாளம் கண்டு அதை மீட்டு உரிய தலித் மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திங்களன்று தமிழ் புலி கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சி.ராஜன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.