ஈரோடு, ஆக. 1- பவானி பாரதி நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி மன்ற செயலரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய புலியூர் பகுதியில் உள்ள பாரதி நகரில் சுமார் 30 குடும்பங்கள் 20 ஆண்டுகளாக குடியிருந்து வரு கிறார்கள். இப்பகுதியில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிலிருந்து தினமும் இரண்டு குடம் தண் ணீர் மட்டுமே கிடைத்து வரும் நிலையில், பாதுகாக்கப் பட்ட குடிநீர், சாக்கடை, தனி நபர் கழிவறை, தார்ச்சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் தலைமை யில் ஊராட்சி மன்ற செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி உட்பட பலர் உடனிருந்தார்.