கோவை, அக்.11- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப் பாளர் சீமானுக்கு மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகனிடம் புரட்சிகர இளை ஞர் கழகத்தினர் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புரட்சிகர இளைஞர் கழகத்தினர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை முதல்வர் அசோகனை சந்தித்து சீமானுக்கு மனநல மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர். இதன்பின் இவ்வமைப் பின் கோவை மாவட்ட செயலாளர் வேல் முருகன், தலைவர் பெரோஸ் பாபு ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு மன நிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றதா என் பதை கண்டறிந்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தூய தமிழில் பேசாதவர்களை அடிப்பேன் எனவும், நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்திய 18 லட்சம் பேரை தவிர மற்றவர்கள் தமிழர்கள் அல்ல. மற்றவர்கள் வந்தேறி, தெலுங்கு வடு கன் என்றும் பிரிவினைகள் தூண்டும் விதத்தில் சீமான் பேசி வருகின்றார். வடமாநிலங்களில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி அடிப்பதும், கொல்வதும் நடைபெறுகிறது. இதேபோல தூய தமிழில் பேசவில்லை என்றால் முதுகுதோலை உரிப்பேன் என்று சீமான் சொல்வதும் பாசிச சிந்தனைகள்தான். ஆகவே, சீமானின் மனநிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.