tamilnadu

img

பெரியார் சிலை உடைப்பு: ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஏப். 9-பெரியார் சிலை தகர்ப்பை கண்டித்து ஈரோட்டில் திராவிட கழகத்தின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள பட்டுக்கோட்டை சாலையில் அரசு பொது மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு மண்டல செயலாளர் த.சண்முகம் தலைமை வகித்தார். இதில் திரளானோர்கள் கலந்து கொண்டு சிலை தகர்த்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கங்கள் எழுப்பினர்.

;