tamilnadu

img

இளம்பிள்ளையில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம்

இளம்பிள்ளை, பிப். 24- இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகில் திரா விடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சனியன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேருந்து நிலை யம் அருகில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அவ்வமைப்பின் தலை வர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசுகையில், குடி யுரிமை திருத்தச் சட்டத்தினால் பல்வேறு தீமைகள் நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டமா னது இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்துக்களுக்கும் ஆபத்தானது. இதனை உணர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.   மேலும், மத்திய அரசு குடியுரிமை பதிவேடு கணக் குப்  பதிவை நடத்துவதற்கு பதிலாக இந்தியாவில் வேலை இல்லாமல் தவிப்பார்கள் குறித்து முழுமை யான கணக்கெடுப்பு நடத்தி வேலை வழங்க முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.