tamilnadu

img

பாத்திமா மரணத்திற்கு காரணம் பேரா. சுதர்சன் பத்மநாபனே

மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் குற்றச்சாட்டு

சென்னை, நவ. 15-  சென்னை ஐஐடியில் பயின்ற மாணவி பாத்திமா லத்தீப் நவம்பர் 8 அன்று  தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட தாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் தற்கொலையில் சந்தேகம் உள்ள தாகவும் அவரது மரணத்திற்கு ஆசிரி யர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என அவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளியன்று சென்னையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதியை சந்தித்து மனு அளித்தார். பின்னர்  செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது: 

எனது மகள் பாத்திமா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் சேர்ந்தார். ஆனால் 4 மாதத்தில் மரணம் அடைந்துள்ளார். தினசரி இரவு எங்களுடன் பேசுவார். ஆனால் நவம்பர் 8 அன்று பேச வில்லை. மேலும் பாத்திமா தற்கொலை  செய்து கொண்டதாக தகவல் வந்தது. நாங்கள் வந்து பார்க்கும் போது அவளது அறையில் இருந்த பொருட் கள் சிதறிக் கிடந்தன. தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த ஆதார மும் இல்லை. தற்கொலை செய்து கொண்டார் என்றால் எங்கிருந்து கயிறு கிடைத்தது, அந்த கயிறு இப்போது எங்கே?  மேலும் தனது மொபைல் போனில் அனைத்து விவரங் களையும் ஸ்கிரீன்ஷாட் மூலம் எடுத்து வைத்த பின்னரே பாத்திமா மரணம் நிகழ்ந்துள்ளது.   அவர் தேர்வு எழுதிய  சுதர்சன் பத்மநாபன் ஆசிரியராக உள்ள பாடப் பிரிவில் மட்டும் 13 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாத்திமா துறைத் தலைவரிடம் தான் சரியாக தேர்வு எழுதியுள்ளதாகவும், குறைந்த மதிப்பெண் வழங்கப் பட்டுள்ளதாகவும் புகார் அளித்துள் ளார். பின்னர் 5 மதிப்பெண்கள் கூடுத லாக வழங்கப்பட்டுள்ளன. அந்த வினாத்தாளை சுதர்சன் பத்மநாபனிடம் எனது மகள் பாத்திமா சென்று வாங்காமல் வேறு மாணவியை அனுப்பி வாங்கியுள்ளார். அங்கு பாத்திமாவுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்ததன் காரணமாக அவர் பயங்கரமான மன உளைச்ச லுக்கு ஆளாகியுள்ளார்.

அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை பலமுறை கேட்டும், இன்றுவரை சிசிடிவி பதிவுகளை ஐஐடி நிர்வாகம் வழங்கவில்லை. என் மகள் மரணம் குறித்து இதுவரையில் ஐஐடி நிர்வாகத்தை சார்ந்த எந்த ஒரு நபரும் எங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை. என் மகள் எதையும் எழுதிவைக்கும் பழக்கம் உள்ளவள். அவள் தற்கொலை செய்யும் முன்பாக விடுதி அறையில் கடிதம்  எழுதி வைத்திருப்பார். அந்த கடிதம் எங்கு போனது எனத் தெரியவில்லை. அவளது அறை தற்கொலை சம்பவம் நடந்த பிறகு சீல்வைக்கப்படவில்லை. இதுகுறித்து உள்ளூர் காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை. இதுகுறித்து காவல் துறை தலைவரிடம் முறையிட்டுள் ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

தமிழக அரசையும், காவல் துறை யையும் முழுமையாக நம்புகிறோம். இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். பேரா சியரியர் சுதர்சன் பத்மநாபன்தான் என் மகள் சாவுக்கு காரணம் . அவரை கைது செய்தால் உண்மை தெரிய வரும். பாத்திமா மரணம் போல் இன்னொரு மாணவிக்கு நேரக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் தமிழக முதல்வரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் நேர்மையாக விசாரணை நடத்தப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி வித்துள்ளார் என்றார்.