tamilnadu

img

இந்து முன்னணியின் கடையடைப்பு அறிவிப்பு வன்முறை அரங்கேற்றத்தை தடுத்து நிறுத்தக்கோரி மக்கள் ஒற்றுமை மேடை மனு

கோவை, மார்ச் 5- இந்து முன்னணியின் கடையடைப்பு போராட்ட அறிவிப்பால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதால், போதிய  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் நிர்வாகிகள் மனு அளித்தனர். கோவையில் வெள்ளியன்று கடை யடைப்பு போராட்டத்திற்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இப் போராட்டம் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படும். மேலும், பொது மக்களின்  உயிருக்கும், உடமைக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படும்  வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2016 ஆம்  ஆண்டு இந்து முன்னணி நடத்திய கடைய டைப்பு போராட்டத்தின்போது வன்முறை  நிகழ்ந்ததைப்போல், இப்போதும் வன் முறை ஏற்படும் என அஞ்சுகின்றோம்.  எனவே, பொதுமக்களின் அச்சத்தை போக் கும் வகையிலும், இயல்பு வாழ்க்கையை நிலை நிறுத்தும்வகையிலும், கோவை மாநகர காவல்துறை உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  முன்னதாக, மக்கள் ஒற்றுமை மேடை யின் ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன், சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம்,  தபெதிக பொது செயலாளர் கு.இராம கிருட்டிணன், விசிக சுசி.கலையரசன் உள்ளிட்ட மக்கள் ஒற்றுமை மேடையினர் மாநகர காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர்.