tamilnadu

img

திருப்பூரில் கழிவுநீர் அகற்றாததைக் கண்டித்து மக்கள் போராட்டம்

திருப்பூர், டிச. 2 - திருப்பூர் மாநகராட் சிக்கு உட்பட்ட 21 ஆவது வார்டு எம்ஜிஆர் நகர் பகுதி யில் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியி லுள்ள சாக்கடை கழிவு களை மாநகராட்சி துப்புரவு பணியா ளர்கள் மாதக் கணக்கில் சுத்தம் செய்யாத காரணத்தால் வீதி முழுவதிலும் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி உள்ளது.  இதனால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவக் கூடிய நிலை ஏற்பட்டுள் ளது. மேலும் குளம் போல் தேங்கி உள்ள சாக்கடைக் கழிவு நீரால் சிறுவர்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை குழிக்குள் விழுந்து காயம் அடையும் நிலை தொடர்ந்து வரு கிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத் திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் ஆத்திர மடைந்த பொதுமக்கள் எம்ஜிஆர் நகர் சாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட னர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரி கள் தேங்கி உள்ள சாக்கடை அடைப்பு களை சரி செய்து கழிவுநீர் வெளியேற வழி செய்தனர். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.