tamilnadu

img

மத்திய அரசு வழங்கும் கடலை சிறுபயறு கேரளத்தில் இன்று முதல் விநியோகம்

திருவனந்தபுரம், மே 20- 80 லட்சம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மாநில அரசின் இலவச உணவு தானிய கிட் வாங்கியுள்ளனர். வெள்ளை அட்டை வை த்திருப்பவர்களுக்கான விநி யோகம் வியாழக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிட் வாங்க முடியாதவர்கள் மே 25 க்குப் பிறகு சப்ளை க்கோ விற்பனை நிலை யங்கள் மூலம் வாங்கலாம். குடும்ப அட்டை பதிவு செய்யப்பட்டுள்ள ரேசன் கடை உள்ள பஞ்சாயத்துக்கு வெ ளியே ஊரடங்கில் சிக்கி உள்ளோர், தற்போது வசிக்கும் பகுதியில் சுய வாக்குமூலம் அளித்து  ரேசன் பொருட்கள் வாங்கலாம். இதில் ஏதே னும் சிரமம் இருந்தால் வட்ட வழங்கல் அலுவ லர் அல்லது பொதுவிநியோக ஆய்வாளரை (ரேசனிங் இன்ஸ்பெக்டர்) அணுகலாம். ஆத ரவற்றோர் இல்லங்கள், அகதிகள் முகாம்  மற்றும் கான்வென்ட்களில் உள்ளவர்களுக்கு சமூக நீதித் துறை மற்றும் மாவட்ட வழங்கல்  அலுவலரின் ஒப்புதலுடன் சப்ளைக்கோ கடை கள் மூலம் கிட்டுகள் வழங்கப்படும். பிஎம்ஜிகேஒய் திட்டத்தின்கீழ் வியா ழன் முதல் அரிசி மற்றும் பருப்பு வகைகள்  வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் பிரத மர் கரிப் கல்யாணின் கீழ் உள்ள மே மாதத்திற் கான அரிசி மற்றும் கடலை சிறுபயறு விநியோ கம் வியாழக்கிழமை முதல் ரேஷன் கடை  மூலம் தொடங்கப்படும். ஏஎச்எச் (மஞ்சள்)  மற்றும் பிஎச்எச் (இளஞ்சிவப்பு) அட்டைக ளில், ஒரு குடும்ப உறுப்பினருக்கு ஐந்து கிலோ  அரிசி மற்றும் 1 கிலோ பட்டாணி / பருப்பு  வகைகள் வழங்கப்படும். ஏப்ரல் மாதத்து க்கான கடலை, சிறுபயறு பெறாத அட்டைதா ரர்களுக்கு இரண்டு கிலோ கடலை அல்லது பயறு கிடைக்கும் என்று சிவில் சப்ளைஸ் இயக்குனர் தெரிவித்தார்.