கோவை, அக்.8 - கடந்த இரு வருடங்களாக வழங் காமல் நிலுவையில் வைத்திருக்கும் போனஸ் தொகையை உடனடி யாக வழங்க வேண்டுமென சிஐடியு இன்ஜினியரிங் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. கோவையில் சிஐடியு டி.பாலன் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கம் மற்றும் பிஎஸ்ஜி பவுண்டரி தொழி லாளர் சங்க நிர்வாகக்குழு கூட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தொழிலாளர்துறை அலுவலருக்கும், தொழிற்சாலை நிர்வாகங்களுக்கும் அனுப்பிய கடி தத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான போனஸ் தொகை இன்னமும் வழங்கப்படவில்லை.
கடந்த காலங் களைப் பொறுத்தவரை பணமதிப் பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, இ- வெய்க்கல் டிரான்ஸ்பர் போன்ற வற்றின் காரணமாக தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டது. இச்சூழலில், கொரோனா பேரிடருக்குப் பின்னர் தொழிலா ளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள் ளனர். எனவே, இரு ஆண்டுகளாக வழங்காமல் நிலுவையில் வைத் துள்ள போனஸ் தொகையை 1965 ஆம் ஆண்டு போனஸ் சட்டப்படி உடனடியாக வழங்க நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். மேலும், ஈட்டிய ஊதியத்தில் 20 சதவிகித போனஸ் மற்றும் பண் டிகை செலவுகளுக்கும், ஊக்கத் தொகையாகவும் 40 சதவிகிதம் என அனைத்து தொழிலாளர்களுக்கும் 60 சதவிகித போனஸை ஒரே தவ ணையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவும், பண்டி கைக்கு ஒரு மாதம் முன்பாக வழங்கப் பட வேண்டும். இதற்கான பேச்சு வார்த்தையை நடத்திட தேதியை யும், நேரத்தையும் நிர்வாகங்கள் வெளியிட முன்வர வேண்டும். இது நடைபெறுவதற்கு தொழிலாளர் துறை அலுவலரும் உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்பட வேண் டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.