tamilnadu

img

அரசு மருத்துவமனையில் காத்துக்கிடக்கும் நோயாளிகள்

தருமபுரி, நவ.8- தருமபுரி அரசு மருத் துவமனையில் புற நோயா ளிகள் நீண்ட நேரமாக காத் திருந்து மருந்துகள் வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.  தருமபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிக மாக பரவி வரும் நிலையில்   தருமபுரி அரசு மருத்துவ மனையில் காய்ச்சலின் கார ணமாக சிகிச்சைக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்ப வர்கள் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகின்றனர். மேலும், குழந்தைகள்  முதல் முதியோர் வரை ஆயிரக்கணக்கா னோர் புறநோயாளியாக சிகிச்சைக்கு வரு கின்றனர். இந்த புற நோயாளிகள் பிரிவில்  மருந்து வாங்குவதற்காக உரிய ஏற்பாடு கள் இல்லாததால் நீண்ட வரிசையில்  வெகு நேரமாக நிற்கவேண்டிய சூழல்  உள்ளது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும்  சிறியவர்கள் மருந்து வாங்குவதற்கு  அதிக  நேரம் காத்திருப்பதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.  இதுகுறித்து வரிசையில் காத்திருந் தவர்கள் கூறுகையில்,  நாங்கள் ஒரு மணி  நேரத்திற்கும் மேலாக மருந்து வாங்க காத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால்  மருந்து வழங்கக் கூடியவர்கள் மிகவும்   தாமதித்து மருந்துகளை வழங்கி வருகின் றனர். அதுமட்டுமல்லாமல் மருந்து வழங்க  அதிகப்படியான கவுண்டர்கள் இல்லாத தால் மருந்து வாங்க நோயாளிகளின் எண் ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மருந்து வழங்கும் கவுண்டரை அதிகரிக்க நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரி வித்தனர்.