tamilnadu

img

தடுப்புச்சுவரை தாண்டி செல்லும் பயணிகள்- விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி, பிப். 19- பொள்ளாசியில் இரண்டு பேருந்து நிலையத்திற்கிடையே உள்ள தடுப்புச் சுவரை தாண்டி, குறுக்குப்பாதையில் செல்லும் பயணிகளால் விபத்து நேரி டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொள்ளாசி நகரில் கடந்த 10 ஆண் டுளுக்கு முன்பு பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களை இணைக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. மேலும், இரு பேருந்து நிலையங்க ளுக்கு இடையே உள்ள பாலக்காடு சாலையின் நடுவே 500 மீட்டர் தூரத் திற்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட் டது. தடுப்புச்சுவரில் இருந்த கம்பிகள் நாளடைவில் அறுந்து போனது. கடந்த ஒரு ஆண்டாக பாராமரிப்பின்றி கிடப் பில் போடப்பட்டதால், தடுப்புச்சுவரின் பல இடங்களில் இடை வெளி ஏற்பட்டது. இந்த இடைவெளியை பயன்ப டுத்தி, போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகு தியில் ஒரு பேருந்து நிலை யத்தில் இருந்து மற் றொரு பேருந்து நிலை யத்திற்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இத னால் விபத்து நேரிடும் அபாயம் ஏற் பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலைத்துறையி னர் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.