tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - கைது

சேலம், மார்ச் 11- குடியுரிமை திருத்தச் சட்டத் திற்கு எதிராக சட்டபேரவையில் தீர் மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்லா மியர்களை போலீசார் கைது செய் தனர்.  குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் நடை முறைபடுத்தமாட்டோம் என தமிழக  சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என்பதை வலியு றுத்தி சேலம் கோட்டை மைதா னத்தில் தொடர்ந்து 24 ஆவது நாளாக 200க்கும் மேற்பட்ட பெண்கள் தொடர் முழக்கப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப் பினர் புதனன்று மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித் திருந்தனர். இதனையடுத்து மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு  போடப்பட்டது. மேலும் ஆட்சியர் அலுவலகம் வழி யாக செல்லும் அனைத்து சாலை களிலும் தடுப்புகள் ஏற்படுத்தி போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டிருந்தது.  இதனிடையே  கோட்டை  மைதா னத்திலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற் பட்ட இஸ்லாமியர்கள் சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலக வளா கத்தில் குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால், பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஊர்வலமாக வந்தவர் களை தடுத்து நிறுத்தினர். இதனால் அனைவரும் ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்தில் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட அனைவரையும் போலீசார்  கைது செய்தனர்.  இப்போராட்டத் தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.