tamilnadu

சாதி பெயரை சொல்லி திட்டும் தலைமை ஆசிரியர் மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார்

கோவை, ஜூன் 24- சாதி பெயரைச் சொல்லி திட்டி, பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தும் தலைமையாசிரி யரைப் பணி நீக்கம் செய்ய வலி யுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராஜமணியிடம் திங்களன்று  பெற் நோர்கள் புகார் அளித்தனர்.  கோவை, சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50க் கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலை யில், கடந்த 19ஆம் தேதி பள்ளியில் இருந்த போது பள்ளியின் தலைமை யாசிரியை ஜெயந்தி, மாணவ, மாணவி களை சாதி பெயரைச் சொல்லி திட்டி யும், பிரம்பால் அடித்தும் காயம் ஏற்ப டுத்தியுள்ளார்.  இதனையடுத்து சாதிய வன்மத் துடன் செயல்படும் தலைமை ஆசிரி யர் மீது மாவட்ட ஆட்சியர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற் றோர்கள் மனு அளித்தனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கள் கூறுகையில், தலைமையாசிரியர் ஜெயந்தி, நல்ல சாதியில் பிறந்து இருந் தால், நல்ல குணம் வரும். தாழ்ந்த சாதி யில் பிறந்தால் எப்படி நல்ல குணம் வரும் என மாணவர்களிடம் சாதிய ரீதியாக பேசி வருகிறார்.  இதுதொடர்பாக நாங்கள் அன்றே தலைமை ஆசிரியரைக் கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டோம். தன் னுடைய கணவர் உயர்ந்த அதிகாரி யிடம் வேலை செய்து வருவதால், தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனவும் எங்களை மிரட்டுகிறார். ஆகவே சாதிய ரீதியாக செயல்படும் தலைமையாசிரியர் ஜெயந்தி மீது துறை ரீதியாகவும், வேறு இடத்திற்கு பணி மாறுதல் கொடுக்காமல், பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகத் தெரி வித்தனர்.