கோட்ட பொறியாளர் அலுவலகம் முற்றுகை - பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலையீடு
கோவை, டிச. 16 – கோவையில் மேம்பாலத்திற் காக ஆணை பிறப்பித்துவிட்டு தற்போது தரைப்பாலம் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார். கோவை ஒண்டிபுதூர் அடுத்த சிவலிங்க புரத்தில் ரயில்வே கடவு உள்ளது. இதன் வழியாக கோவை ரயில்நிலையம் மற்றும் கேரளா மாநிலம் நோக்கி செல்லும் ஏராள மான ரயில்கள் செல்கிறது. இதன்கா ரணமாக இந்த ரயில்வே கிரா சிங்கை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள் ளாகி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இங்கு மேம்பாலம் கட் டப்பட வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் விளை வாக 2011 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயல லிதா இப்பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான ஆணை பிறப் பித்தார். ஆனால் கடந்த 8 வருடங் களாக இதற்கான எவ்வித பணி களும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் இங்கு மேம் பாலத்திற்கு பதிலாக தரைப்பாலம் அமைப்பது என அரசு முடிவெடுத் துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது இப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டால் மழைக்காலத் தில் தண்ணீர் தேங்கி மக்கள் நட மாட முடியாத நிலை ஏற்படும். மேலும், அவசர தேவைக்குகூட ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங் கள் செல்ல முடியாத நிலை உண் டாகும். கட்டுமான பணிகளுக் கான பொருட்களை கனரக வாக னங்களில் கொண்டு வரமுடியாது. இது கட்டுமான பணிகளை பாதிக் கும். ஆகவே ஏற்கனவே அம்மா அரசு உத்தரவிட்ட மேம்பாலத்தை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தை இப்பகுதி மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்ஒருபகுதியாக திங்க ளன்று வடகோவையில் உள்ள நெடுஞ்சாலை கோட்ட பொறியா ளர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவலிங்கபுரம் மக்கள் முற்றுகையிட்டு மனுவை அளித்து விட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். இதனையடுத்து கோட்டபொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பொதுமக்கள் சார்பில் சந்தித்து பேசினார். இதனையடுத்து அவர் பொதுமக்க ளிடம் பேசுகையில், உங்களின் கோரிக்கையில் நியாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி யுள்ளேன். நீண்டகால திட்டத் திற்கு மேம்பாலம் அமைப்பதே சிறந்தவழி. தற்போது ஊரக தேர்தல் காலமாக இருப்பதால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கான பணியில் உள்ளனர். ஆகவே ஜனவரி முதல்வாரத்தில் அதிகாரிகளை சந்தித்து மக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்படும் என்றார். இதனை யடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக இப்போ ராட்டத்தில் சிபிஎம் சிங்கை நகர நகர செயலாளர் வி.தெய்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.