tamilnadu

திருப்பூர் கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கிக்கு மூன்று மாதத்தில் மறுதேர்தல் நடத்த ஆணை

திருப்பூர், ஜூலை 3 -  திருப்பூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்துவிட்டு மூன்று மாத காலத்தில் மறு  தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று மேற்கு மண்டல கூட்டுறவு தேர்தல் தொடர்பான விசா ரணைக் குழு உத்தரவிட்டிருப்பதாக வழக்குத் தொடுத்தவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருப்பூர் தாராபுரம்  சாலையைச் சேர்ந்தபி.கிருஷ்ண சாமி கூறியிருப்பதாவது: கே.677 திருப்பூர் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் உறுப்பினர் எண் 10112 ஆக அங்கம் வகிக்கிறார். கடந்த  ஏப்ரல் 30ஆம் தேதி வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் கொடுத் திருக்கிறார். ஆனால் அந்த அதிகாரி மனுவை வாங்க மறுத்திருக்கிறார். இதன்  பிறகு காவல் உதவி ஆணையர் பேச்சு வார்த்தை நடத்தியபின் வேட்பு மனுவை அந்த அதிகாரி பெற்றுக் கொண்டார்.  ஆனால் அந்த வேட்புமனுவைத் தள்ளு படி செய்துவிட்டதாகவும் 11 பேரின் வேட்பு மனுவை மட்டும் ஏற்றுக் கொண்டதாகவும் அதிகாரி அறிவித்தார். வங்கித் தலைவ ராக பி.பாபு, துணைத் தலைவராக எம்.ஹரி ஹரசுதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்திருக்கிறார். இதையடுத்து கூட்டுறவு சங்கங்களின் வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக் கப்பட்ட மேற்கு மண்டல விசாரணைக் குழு விடம் இவர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த விசாரணைக்  குழு கடந்த ஜூன் 22ஆம் தேதி  தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பில் தனது  வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி தள்ளு படி செய்தது தவறு என்றும், வெற்றி பெற்ற தாக அறிவிக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர் உள்பட ஆறு நிர்வாகக்குழு உறுப்பினர்களின் தேர்தலை ரத்து செய்வ தாகவும் அறிவித்தது. அத்துடன் வழக்குத் தொடுத்த தன் னையும் சேர்த்து மூன்று மாதங்களுக்குள் சட்டப்படி நியாயமாகவும், வெளிப் படையாகவும் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் மண்டல விசாரணைக்குழு உத்தர விட்டுள்ளது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.