நாமக்கல், ஜூன் 21- திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனிமூன் கிராமத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலை யம் அமைக்கக் கூடாது என வலியு றுத்தி அப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள அனிமூர் கிராமம். இக் கிராமத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு திருச்செங்கோடு நகராட்சி 11.2 ஏக்க ரில் குப்பைகளை உரமாக்க கிடங்கு அமைக்கப்பட்டது. இங்கு திருச்செங் கோட்டில் இருந்து கொண்டு வரப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பைகளிலிருந்து உரம் தயாரித்து வந்தது. ஆனால் இந்த திட்டம் நாளடைவில் நலிவை சந்தித்தது.
இதனால், அனிமூர் கிராமத்தில் கொசுத்தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் சூழல் ஏற் படுகிறது. அடிக்கடி ஏற்படும் தீ விபத் துக்களால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் நகராட்சி சார்பில் நவீன கழிவு நீர் மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில், திருச்செங் கோடு நகராட்சி பகுதியில் சேகரிக்கப்ப டும் செப்டிக் டேங்க் கழிவு நீரை கிரா மத்தில் பெரிய தொட்டி கட்டி, அதில் அந்த நீரை சேகரித்து மறுசுழற்சி முறையில் நீரை பிரித்தெடுத்து. அதனை அங்கு உள்ள செடி மற்றும் மரங்களுக்கு பயன்படுத்திக் கொள்வது என்றும், மீதமாகும் வண் டலை உரமாக மாற்றுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு அணையின்படி திருச்செங்கோடு நகராட்சி அனிமூர் பகுதியில் உரக்கிடங்கு அமைந்துள்ள பகுதியில் அதற்கான பணிகளை துவக்கி செயல்படுத்த வெள்ளியன்று நகராட்சி நிர்வாகத்தினர் குவித்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் தங் கள் பகுதியில் கழிவு நீர் தொட்டி அமைக்க கூடாது என வலியுறுத்தி திருச்செங்கோடு கோட்டாட்சியர் கதிர்வேல், நகர காவல் ஆய்வாளர் ஆரோக்கியராஜ், நகராட்சி ஆணையர் வேலாயுதம், மாசுக் கட்டுப் பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. ஏற்கனவே உரக்கிடங்கு அமைப்பதாக கூறி இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலை நகராட்சி நிர்வாகம் மாசுபடுத்தி விட்டதாகவும், இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதியதாக கழிவுநீர் தொட்டி அமைத்து திருச்செங்கோடு நகரில் எடுக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவு நீரை இங்கே சேமித்து உரமாக்க திட்டமிட்டு நகராட்சி நிர்வாகம் செயல்படுத்தி வரு கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே புதியதாக கழிவு நீர் தொட்டி அமைப்பதற்கு அனுமதி வழங்கக்கூடாது என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத் தனர். முறையான அனுமதி வாங்காமல் கழிவுநீர் தொட்டி அமைக்க கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொட்டி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். முறையான அனுமதி வாங்கிய பிறகு பொதுமக்களுக்கு இதனால் எந்த பிரச் சனையும் இல்லை என உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தை செயல்படுத்த விடுவோம் என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர். பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அனிமூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.