தருமபுரி, ஆக.5- தேசிய மருத்துவ ஆணைய மசோதா மற்றும் நெக்ஸ்ட் தேர் வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் திங்களன்று வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். இந்திய மருத்துவ ஆணை யத்தை கலைத்துவிட்டு புதிதாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோ தாவை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. மேலும் நான்காம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்ற புதிய தேர்வையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும், எம்பிபிஎஸ் படித்து முடித்த பிறகு மேற்படிப்புக்கு செல்லவோ அல்லது மருத்துவ பணியை துவங்கவோ நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதனை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக தருமபுரி அரசு மருத் துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்துக்கு தரும புரி அரசு மருத்துவகல்லூரி மாணவர் சங்க தலைவர் பக்ரூ தின் தலைமை வகித்தார். செய லாளர் அஸ்வின், பொருளாளர் லோகேஷ், இணை செயலாளர் ரமேஷ், துணைத் தலைவர் நிக் கிலா ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேசிய மருத் துவ ஆணையம் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை கண் டித்தும், இதனை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.