tamilnadu

img

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாளை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மருத்துவர்கள் ஒருநாள் வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், திங்களன்று தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை தாக்கல் செய்தார். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற அமைப்பை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சில நியமன உறுப்பினர்களால் நிரப்பப்பட்ட ஒரு குழுவை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கும் இந்த மசோதாவை, மருத்துவக் கல்வித்துறையில் கண்காணிப்பு என்பதே இல்லாத மிகப்பெரிய “சீர்திருத்தத்தை” கொண்டுவரப்போகிற மாபெரும் மசோதா என்று ஹர்ஷ்வர்தன் கூறினார். இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 என்ற சட்டத்தை ரத்து செய்யும் விதமாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. 

 நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் தற்போது இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்டப்பூர்வமான கண்காணிப்பு மற்றும் ஒழுங்காற்று வளையத்திற்குள் இருக்கின்றன. இந்த கண்காணிப்பு, புதிய மசோதாவின் படி முற்றாக ரத்து செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மசோதாவுக்கு இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.  
இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஒருநாள் நாடு முழுவதும் சுமார் 10000 மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.