திருப்பூர், பிப். 6- உடுமலையில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனையினை அமைச்சர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் கால்நடைகளுக்கான தரம் உயர்த்தப்பட்ட மாவட்ட பன்முக மருத்துவமனையினை, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடு மலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், இம்மருத்துவ மனையில் மேம்பட்ட மருத்துவ வசதிகளான சிறப்பு அறுவை சிகிச்சை கூடம், வெளி மற்றும் உள்நோயாளி சிகிச்சை வசதி, கணிணி மயமாக்கப் பட்ட ஊடுகதிர் வசதி, நுண்ணொலி ஆய்வு கருவி, நோய் அறிதல் ஆய்வுக்கூடம் ஆகிய வசதிகளுடன் 4 கால்நடை உதவி மருத்துவர்கள், முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் மற்றும் கால் நடை ஆய்வாளர், 8 கால்நடை பராமரிப்பு உதவியா ளர்கள் மற்றும் ஆய்வுக்கூடம் அடங்கிய தொழிற் நுட்ப குழுவினர் உள்ளனர். மேலும் ஒரு இளநிலை உதவியாளர், தட்டச்சர், இரவுக்காவலர் அடங்கிய நிர்வாக அலுவலகம் செயல்படும். இவற் றிற்கு தலைமை தாங்கி, சிறப்பு மருத்துவ சேவை அளிப்பதை கண்காணித்திட உதவி இயக்குநர் பதவி நிலையில் ஒரு பிரதம மருத்துவர் நியமிக்கப்பட்டு சேவை அளிக்கப்பட உள்ளது. மேலும், கால்நடை பராமரிப்புத் துறையில் புரட்சி ஏற்பட்டுத்தும் வகையில் தெற்கு ஆசியா விலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டிலான சர்வதேச தரத்திலான ஒருங்கி ணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால் நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வரும் பிப்.9 அன்று நடைபெற உள்ளதென அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட பண்ணைக்கிணறு ஊராட்சி கோழிக்குட்டை பகுதியில் புதிய கால்நடை கிளை நிலையத்தினை யும் மற்றும் பொன்னேரி ஊராட்சி, பொன்னேரியில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்த கத்தினையும் அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது, உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், திருப்பூர் மாவட்ட ஆவின் சங்க தலைவர் மனோகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாண்டியன், கால் நடை பராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குநர் ரகுநாதன், உதவி இயக்குநர் மரு.ராம சாமி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.