tamilnadu

img

பழைய அமராவதி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி

தாராபுரம், ஆக. 19 - தாராபுரம் பழைய அமராவதி வாய்க் காலுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அமராவதி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி  வீதம் 5 நாட்களுக்கு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும்  புதிய அமராவதி பாசன வாய்க்காலுக் கும் அரசு உத்தரவின்படி தண்ணீர் வழங் கப்பட்டது. ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கருர் சென்றடைந்தது.  ஆற்றிலும், புதிய வாய்க்காலிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில் காய்ந்து கிடக்கும் பயிர்களை காப்பாற்ற உயிர்தண்ணீர் விடவேண்டும் என பழைய அமராவதி பாசன சங்க நிர்வாகி கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தண் ணீர் பழைய வாய்க்காலுக்கு திறந்து விடப்படவில்லை. இதனால் பாதிக்கப் பட்ட விவசாயிகள், தளவாய்பட்டிணம், அலங்கியம், தாராபுரம், கொளிஞ்சிவாடி ஆகிய நான்கு வாய்க்கால்களை சேர்ந்த விவசாயிகள் பாசன சங்கத்தலைவர்கள் சந்தானகிருஷ்ணன், ஈஸ்வரமுர்த்தி, முரு கேசன், குமார் ஆகியோருடன் தாராபுரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை திங்களன்று முற்றுகை யிட்டனர். உதவி பொறியாளர் ரவிச்சந்திர னிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.  உயர் அதிகாரிகளிடம் பேசி பழைய அமராவதி வாய்க்காலுக்குத் தண்ணீர் திறந்துவிட உரிய உத்தரவுகளைப் பெற்று, தண்ணீர் விட நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என உதவி பொறியாளர் உறுதி யளித்தார். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.