உடுமலை, ஆக. 13- தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி செவ்வாயன்று உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே மாணவ, மாணவியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடுமலை கல்வி மாவட்டத் தில் 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும் இப் பள்ளிகளில் நான்கு ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் நிலைக்கல்வி படித்து முடிக்கின்ற னர். ஆண்டுதோறும் பிளஸ் 2 முடித்துச் செல்லும் மாணவர்க ளுக்கு தமிழக அரசின் சார்பில் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இலவச மாக ‘விலையில்லா மடிக்கணினி’ வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் படித்த பிளஸ்2 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் நடப்பு கல்வியாண்டில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கு மடிக்கணினி கள் வழங்கும் பணி நடந்து வரு கின்றன. இதனால் முந்தைய ஆண்டுகளில் படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் படித்த பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர் களிடம் தங்களுக்கும் மடிக் கணினி வழங்க வேண்டும் என கேட்டு மனு அளித்தனர்.
மேலும், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து கல்வித்துறை மற்றும் காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் மடிக்கணினி கள் வழங்க நடவடிக்கை எடுப்ப தாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் ஒரு மாத காலமான நிலை யில் மாணவ, மாணவியர்கள் உடு மலை மாவட்ட கல்வி அலுவலகத் திற்கு சென்றனர். கல்வி அதிகாரி கள் மாணவர்களிடம் உரிய பதில் அளிக்காத நிலையில் அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்குச் சென்று சாலையோரம் அமர்ந்து அமைதியாக போராட்டம் நடத்தி னார்கள். அமைதியாக சட்டம் ஒழுங் கிற்கு பாதிப்பு ஏற்படாத வகை யில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் காவல் துறை உதவி ஆய்வாளர் மிரட்டிய தால் அமைதியாக முடிய வேண் டிய போராட்டம், சாலை மறியல் போராட்டமாக மாறியது. கடுமை யான வெயில் இருந்த போதும் போராட்டம் தொடர்ந்து நடை பெற்றது. பல மணி நேரம் கழித்து போராட்டம் நடந்த இடத் திற்கு வந்த காவல்துறை கண் காணிப்பாளர் ஜெயசந்திரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பரிமளம் (பொறுப்பு) ஆகியோர் போராட்டம் நடத்திய மாணவர் களிடம் பேச்சு வார்த்தை நடத்தி னர். எனினும் தொடந்து மாலை வரை போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகை யில், பள்ளிகளிலும், மாவட்ட கல்வி அலுவலரிடமும் கோரிக்கை மனு அளித்த போது, 15 நாட்களில் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசென்று விரைவில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது வரை தங்க ளுக்கு தமிழக அரசின் விலை யில்லா மடிக்கணினிகள் வழங்க வில்லை என்றும், அதிகாரிகள் உறுதி அளித்தபடி தங்களுக்கு உட னடியாக வழங்க வேண்டும் என்றனர்.
உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு அரசு வழங்க வேண்டிய இலவச மடிக்கணினி வழங்காமல் இருப்பதை கண்டித்து மாணவ மாணவியர்கள் அமைதியாக சாலை யின் ஓரத்தில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் சிவாராஜ் மாணவர்களை மிரட்டியதைக் கண்டு அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த நடவடிக்கையால் சுமூகமாக முடிய வேண்டிய மாணவர்கள் போராட்டம் சாலை மறியல் போராட்டமாக மாறியது.