கோவை, மே 28–இஸ்லாமிய பெருமக்களின் ரமலான் நோன்பையொட்டி கோவையில் செவ்வாயன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் கோவை போத்தனூர் பாத்திமாகனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிறுபான்மைக் மக்கள்நலக்குழுவின் மாவட்ட தலைவர் ஏ.முகம்மது முசீர், செயலாளர் ஜெரோம்ரோட்டரிக், பொருளாளர் எஸ்.புனிதா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் எஸ்.கருப்பையா வரவேற்றார். இப்தார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில பொதுச்செயலாளர் ப.மாரிமுத்து உரையாற்றினார். இதில் லலிதா மருத்துவமனையின் மருத்துவர் பி.சுந்தர்ராஜன்,காட்டூர் ஆலய அருள்தந்தை குழந்தைசாமி, உப்பிலியபாளையம் அஹ்லே சுன்னத்வல் ஜமாத் தலைமை இமாம் ஜலாலுதீன் இம்தாதி, கோவை மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சூப்பர் மெடிக்கல்ஸ் உமைதுரஹ்மான், எ.பாத்திமாகனி திருமண மண்டபத்தின் டிரஸ்ட்டி யாசின், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் சி.லாரன்ஸ் நன்றி கூறினார்.