tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில்

அன்னூர், ஆக.20- அன்னூர் அடுத்து கஞ்சப் பள்ளியில் சுகந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை மற்றும் கலை விழா நடைபெற்றது. கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், கஞ்சப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சுதந்திர தினத்தை முன் னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை மற்றும் கலை விழா நடைபெற்றது. இதில், விளை யாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இவ் விழாவிற்கு சங்கத்தின் நிர்வாகி லோகநாதன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எஸ்.கனக ராஜ், ஒன்றிய தலைவர் சரவணன், ஒன்றியச் செயலாளர் அர்ஜுன்,  முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மேலும், கஞ்சப்பள்ளி ஊராட்சியில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.