tamilnadu

img

ஓலா டேக்சி நிறுவன ஒப்பந்ததாரர்கள் போராட்டம்

கோவை, ஜூன் 19- நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தத் தொகையை முறையாக வழங்காத காரணத்தால் ஒப்பந்ததாரர்கள் புதனன்று ஓலா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பெங்களூரைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்படும் ஓலா  கார் நிறுவனத்தின் கோவை கிளை  ஆர்எஸ்.புரத்தில் இயங்கி வருகிறது. இதில் சொந்தமாக கார் வைத்துள்ள  ஏராளமானோர் ஓலா நிறுவனத்து டன் ஒப்பந்தம் செய்து (டேக்சி) இயக்கி வருகின்றனர். இந்நிலையில் ஒப் பந்தத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட குறைந்த தொகையை வழங்க ஓலா நிர்வாகம்  முடிவு செய்துள்ளது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓலா ஒப்பந்த தாரர்கள் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.  இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், கோவை மாநகரில் 500க்கும் மேற்பட்ட ஓலா கார்கள் இயங்கி வருகிறது. ஒப்பந்ததாரர்கள் நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் செலுத்தி வரு வதாகவும், பயணிகள் வாடகையில் 25% கமிஷனாகவும் வழங்கி வந் துள்ளனர். இந்நிலையில் இவர்களுக் குப் போனஸ் கமிஷனாக மூன்று ரூபாய் ஐம்பது பைசாவில் இருந்து நான்கு ரூபாய் வரை ஓலா நிர்வாகம் வழங்கி வந்த நிலையில், தற்போது இருபத்தி ஐந்து பைசா மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் முறையிட்டபோது சுமூக முடிவு எடுக்கப்படும் என நிர்வாகம் கூறி யதையேற்று வாகனங்களை இயக்கி யுள்ளனர். ஆனால் தற்போது வெறும் இருபத்தி ஐந்து பைசா மட்டுமே வழங்க முடியும் என்கின்றனர். ஒப்பந் தத்தின்படி நடப்போம் என்று ஓலா  நிர்வாகம் கூறியதை நம்பிக் கடன் வாங்கி வாகனங்களை இயக்கினோம். போதிய அளவு வருமானம் இல்லாவிட் டாலும், சொந்த தொழில் என்பதால் இதுவரை வாகனங்களை இயக்கி வந்தோம். ஆனால் இனிமேலும் நஷ் டத்தில் வாகனங்களை இயக்க முடி யாத சூழல் உள்ளதாக தெரிவித்தனர்.