tamilnadu

img

மரங்களை வெட்டி அகற்றுவதில் முனைப்பு காட்டும் அதிகாரிகள் : மரக்கன்றுகளை நடுவதிலும் ஈடுபட கோரிக்கை

சீர்காழி: கொள்ளிடம் அருகே தேசிய நெடுஞ்சாலை யில் இருந்த 50 ஆண்டு பழ மையான புளியமரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.     நாகை மாவட்டம் கொள்ளி டத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் வளர்ந்திருந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பல மரங்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறை யால் வேரோடு பிடுங்கப்பட்டு வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. கொள்ளிடத்திலிருந்து சீர்காழி வரை சாலையில் இருந்த 30 க்கும் மேற்பட்ட புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறுவதால் இடையூறாக உள்ள மரங்கள் அகற்றப்படுவதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ஒரு மரம் வளர்ந்து பயன் தருவதற்கு குறைந்தது 5 முதல் 10 வருடங்கள் ஆகிறது. சாலையில் நிழல் தர வேண்டும்   என்ற நோக்கத்திலும் பயன் தர வேண்டும் என்ற நோக்கத்திலும் சாலை ஓரத்தில் மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மரக்கன்றுகளை அதிக எண்ணிக்கையில் நட்டு பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புளி ஆயிரம் பொந்து ஆயிரம் என்று சொல்வது வழக்கம். புளியமரங்களில் ஆயிரம் பொந்துகள் இருந்தாலும் ஆயிரம் வருடங்கள் தொடர்ந்து பயன் தரக் கூடியதாகும். எனவே புளிய மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பொது இடத்தில் நட்டு பராமரிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.