மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி புகார்
ஈரோடு, அக். 14- மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்ட மூன்று சக்கர சைக் கிளை, காற்று அடித்து தருவதாக கூறி திரும்ப பெற்ற அதிகாரிகள், அதனை திருப்பித் தர வில்லை எனக்கூறி ஈரோடு மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாற் றுத்திறனாளி மனு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது, ஈரோடு மாவட்டம், பெரியார் வீதியை சேர்ந்தவர் பழனிசாமி (65). இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் கவிதாவிடம் அளித்த மனுவில் கூறிருப்பதா வது, கடந்த செப். 23 ஆம் தேதியன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம், தனக்கு கை மூலம் பெடலை சுற்றி இயக்கும் வகையிலான சைக்கிள் வேண்டும் எனக்கோரி மனு அளித்தேன். இதைய டுத்து உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நல அலு வலகத்தினரை அழைத்து, சைக்கிள் வழங்க ஆட்சி யர் உத்தரவிட்டார். இதன்பின் கையால் இயக்கும் வகையிலான மூன்று சக்கர சைக்கிளை உடனடியாக ஆட்சியர் மூலமே வழங்கினர். இதனால் மகிழ்ச்சிய டைந்த நான் குறைதீர் கூட்ட அறையை விட்டு வெளியே வந்தபோது, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையினர், சைக்கிளுக்கு காற்று அடித்து தருவ தாக கூறி வாங்கி சென்றனர். ஆனால், அதன்பின்னர் தனக்கு மீண்டும் சைக்கிள் தரவில்லை என மனு வில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இம்மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விசாரித்து, சைக்கிளை திரும்ப வழங்க உத்தரவிட்டார். உடனடியாக அங்கிருந்த அலுவலர் கள் வந்து மற்றொரு சைக்கிளில் அவரை அமர வைத்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் கூறியதாவது, மாற்றுத்திறனா ளியான பழனிசாமியிடம், மாற்றுத்திறனாளி என் பதற்கான அடையாள அட்டை உள்ளிட்ட ஆவ ணங்கள் இல்லை. இருப்பினும், ஆட்சியர் உத்தர வுப்படி கடந்த செப். 23 ஆம் தேதியன்று உடனடி யாக அவருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. அவரு டன் யாரும் வராததால் தன்னால் எடுத்து செல்ல இயலாது என்றார். இதனால், எங்கள் அலுவல கத்தில் சைக்கிளை வைத்திருப்பதாகவும், யாரை யாவது அழைத்து வந்து எடுத்து செல்லுங்கள் எனக் கூறினோம். அதை ஏற்று, அவர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின், அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. தற்போது, அவர் வந்துள்ளதால், அவருக்கு சைக்கிள் வழங்குவதை, முறையாக பதிவு செய்துவிட்டு, சைக்கிளை கொடுத்துவிடுவோம். மேலும், அவருக்கு மாற்றுத்திறனாளிக்கான அடை யாள அட்டை வழங்க, விண்ணப்பம் பெற்றுள் ளோம். இதன் மூலம், அவருக்கு வேறு சில சலுகை களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.