நாமக்கல், ஆக.13- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இந்த தொடர் முழக்கப் போராட்டத் திற்கு, கிளைத் தலைவர் ஆர்.குருசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் கோரிக்கை களை விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.சம்பூரணம், ஒன்றியத் தலைவர் வி.சண்முகம், ஒன்றியப் பொரு ளாளர் சி.சண்முகம், மாவட்டக் குழு உறுப் பினர் பி.எம்.பொன்னுசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.முரு கேசன், குமாரபாளையம் நகரக் குழு உறுப்பினர் பி.பாலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழக அரசு, விவசாயத் தொழிலாளர்களுக்கு 5 சென்ட் பட்டா நிலம் வழங்க வேண்டும். விவசாயிகள் சாகு படி செய்யும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.10 ஆயிரம் சாகுபடி தொகை வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை இரு நூறு நாட்களாக உயர்த்திட வேண்டும். விவசாய தொழிலாளர்களை தேசிய கிராமப் புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் விவ சாய பணிகளுக்கு பயன்படுத்த ஊராட்சி யின் மூலம் தேர்வு செய்து வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச சட்ட கூலியை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி தொடர் முழக் கங்கள் எழுப்பப்பட்டன.
ஓமலூர்
இதேபோல் காடையாம்பட்டி ஒன்றி யத்தில் ஞாயிறன்று விவசாய தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் நூறு நாள் வேலை வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது. ஆனால் கஞ்சநாயக் கன்பட்டி ஒன்றியத்தில் இதுவரை வேலை வழங்கப்படவில்லை. எனவே வேலை வழங் காத நாட்களுக்கு அரை நாள் சம்பளம் வழங்கவேண்டுமென அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கம் சார்பில் காடை யாம்பட்டி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சந்தித்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மனுவை பெற்றுக் கொண்டு, இன்னும் ஒரு வாரத்தில் அனைவருக்கும் வேலை கொடுப்பதாக உத்திரவாதம் அளித்தார். மேலும் வேலை கொடுக்காத நாட்களுக்கு அரை சம்பளம் வேண்டும் என்ற கோரிக் கையை பரிசீலனை செய்வதாக தெரிவித் தார். இந்த போராட்டத்தில் மாவட்ட தலை வர் வீ.தங்கவேல், மாவட்டச் செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட நிர்வாகி சின்ராஜ் உள்ளிட்ட முன்னூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.