tamilnadu

வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்- கைது

திருப்பூர், நவ. 26 - 36 ஆண்டுகளுக்கு மேலாக  பணியாற்றும் சத்துணவு ஊழி யர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பணிக் கொடை ரூ.5 லட்சம், பணி ஓய்வு பெறுவோருக்கு மாதம் ரூ.9 ஆயி ரம் குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். தமிழகம் முழுவதும் சத்து ணவு ஊழியர்களின் கோரிக்கை களுக்காக மாவட்டத் தலைநக ரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கம் தீர்மானித் தது. அதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக செவ்வா யன்று  மறியல் போராட்டம் நடை பெற்றது. சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி.பாக்கியம் தலைமை ஏற்க, கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் ஆர்.ராமசாமி பேசினார். மாநிலச் செயலாளர் கே.சத்தி மறியல் போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். நெடுஞ்சா லைத் துறை சாலைப் பணியாளர் சங்க கோட்டச் செயலாளர் ஆர். ராமன், மாநில செயற்குழு உறுப்பி னர் பி.ரீட்டா, சத்துணவு, அங்கன் வாடி ஓய்வூதியர்கள் சங்க மாவட் டத் தலைவர் ஆர்.முத்தமிழ்ராஜ், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூ தியர் சங்க மாநிலப் பொருளாளர் எம்.பாக்கியம், அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் திலீப் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இப்போராட்டத்தில் பெண் சத்துணவு ஊழியர்கள் பெருந்திர ளானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கம் எழுப்பினர். இதைய டுத்து மாவட்ட ஆட்சியரகம் முன் பாக பல்லடம் சாலையில் மறிய லில் ஈடுபட்டனர். போலீசார் அவர் களைக் கைது செய்து வாகனங்க ளில் ஏற்றி தனியார் திருமண மண் டபத்திற்கு கொண்டு சென்று சிறை வைத்தனர்.