tamilnadu

எண்ணக் கூடாதது, எண்ண வேண்டியது மறுவாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தனி அடையாளம்

ஈரோடு, மே 21-ஈரோடு மக்களவைத் தொகுதிக்குஉட்பட்ட திருமங்கலம் வாக்குச்சாவடியில் ஏப். 18 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஏற்பட்ட குளறுபடி காரணமாக மே 19ஆம்தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் 81.4 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. மறு வாக்குப்பதிவுமுடிந்ததும் வாக்குச்சாவடி முகவர்கள்முன்னிலையில் இயந்திரம் சீல் வைக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் 19ஆம் தேதி இரவு வாக்கு எண்ணும் மையமான சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஈரோடு மக்களவை தொகுதிதேர்தல் பொது பார்வையாளர் மாணிக்குர்ஷல், மாநில காவல்துறை பார்வையாளர் சஞ்சய் சின்ராவ் சிண்டே மற்றும்வேட்பாளர்களின் பிரதிநிதிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் கதிரவன் ஆகியோர் முன்னிலையில் ஏற்கனவே ஈரோடு தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஏப். 18ஆம் தேதி திருமங்கலம் வாக்கு சாவடியில் பதிவான மின்னணு பெட்டியில் எண்ணக் கூடாதது என்ற ஸ்டிக்கர்ஒட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து புதிதாக பதிவான வாக்குப்பெட்டி மீது எண்ண வேண்டியது என்ற ஸ்டிக்கரை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது இது குறித்தவிவரம் ஒலிப்பெருக்கில் அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்கு எண்ணிக்கைநடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.