திருப்பூர், செப். 27 – திருப்பூரில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் பாதிப்பு கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சி யர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத் தில் வெள்ளியன்று ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தலைமை யில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் வடகிழக்குப் பருவமழை சமயத்தில் அனைத்து உள்ளாட்சி மற்றும் அரசுத் துறை நிர்வாகங் களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அக்டோபர் 1ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல் படக்கூடிய விதத்தில் வட்டாட்சி யர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட வேண் டும். பாதிப்புகள் ஏற்படும் பகுதி கள் தொடர்பான வரைபடங்களை வைத்திருப்பதுடன், சம்மந்தப் பட்ட பகுதிகளில் தணிக்கை செய்து தேவையான முன்னேற் பாடுகளை செய்து வைத்திருக்க வேண்டும். அனைத்து நிவாரண மையங்களையும் பார்வையிட்டு தேவையான வசதிகள் செய்து வைக்க வேண்டும். முட்புதர் அகற் றம், சாக்கடை தூர்வாருதல், சிறு பாலங்கள் தூர்வாருதல் போன்ற பணிகளை உள்ளாட்சி, நெடுஞ் சாலைத் துறையினர் செய்து வைக்க வேண்டும். மேலும் மழை பாதிப்புகள் குறித்து ஆட்சியர கத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டண மில்லா தொலைபேசி மூலம் நேரடித் தகவல் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் விஜய கார்த்தி கேயன் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகு மார், தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் உள்பட அனைத் துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.