tamilnadu

கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, ஜன. 28 –  சீனாவில் இருந்து கோவை வந்தவர்க ளுக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் கு.ராசா மணி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து கோவையை சேர்ந்த 4 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னையைச் சேர்ந்த  தலா ஒருவர் என 8 பேர் கோவை விமான  நிலையம் வந்தனர். அப்போது அவர்க ளுக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனோ வைரஸ்  பாதிப்பு இல்லையென உறுதி செய்யப்பட் டது. இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சி யர் கு.ராசாமணி கூறுகையில், கோவை மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. கோவை விமான  நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேருக்கும் கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  28  நாட்களுக்கு பொதுநிகழ்ச்சிகளில் பங் கேற்க வேண்டாம் என அவர்களுக்கு  அறிவு றுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த 8 பேரை யும் தனி இடத்தில் வைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

;