கோவை, மே 19-கோவை மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலங்களில் புதிதாக நான்கு பூங்காக்கள் அமைக்கப்பட்ட உள்ளன. நகர்ப்புற புத்துயிர் மற்றும் உருமாற்றத்திற்கான அடல்மிஷன் திட்டத்தின் படி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 21 இடங்களில் பூங்காக்கள்அமைக்க திட்டம் வகுக்கப்பட்டன. அதில், கிழக்குமண்டலத்தில் 6 பூங்காக்கள், வடக்கு மண்டலத்தில்3 பூங்காக்கள், மேற்கு மண்டலத்தில் 6 பூங்காக்கள், தெற்கு மற்றும் மத்திய மண்டலத்தில் தலா ஒரு பூங்காக்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.இந்த பூங்காக்களை ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைக்க ரூ.14.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின்னர் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பூங்கா நகர் மற்றும் டெக்ஸ்டூல் காலனி பகுதிகளிலும், கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட திருமுருகன் நகர் மற்றும் எஸ்.ஆர்.கார்டன் பகுதிகளில் என மொத்தம் 4 பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.