தருமபுரி, ஆக.1- புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால், கல்வி கார்ப்பரேட் முதலாளிகளிடம் சென்று விடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தெரிவித்தார். மத்திய பாஜக அரசின் தேசிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் மற்றும் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்று வரு கிறது. இதன்ஒருபகுதியாக தருமபுரி தொலைபேசி அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் மற்றும் தெருமுனை பிரச்சாரம் சிபிஎம் நகர செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை யில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப் பினர் மதுக்கூர் இராமலிங்கம் கலந்து கொண்டு பேசியதாவது, ஜெய் ஸ்ரீராம் என்ற சொல்லச் சொல்லி முஸ்லீம் சிறுவனை ஆர்எஸ்எஸ் கும்பல் கொலை செய்கின்றனர். சிறுபான்மை மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரு கின்றனர். இதைப்பற்றி பாஜக பேசுவ தில்லை. முத்தலாக் சட்ட மசோதாவை அவசர அவசரமக அமல்படுத்தும் மத்திய பாஜக அரசு பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்ற மறுக் கிறது. மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளனர். இதனால் மோட்டார் தொழிலில் ஈடு படுவோருக்கு வேலை இழப்பு ஏற் படும் அபாயம் உள்ளது என தெரி வித்தார். மேலும் அவர் கூறுகையில், புதிய தேசிய கல்விக்கொள்கை நடை முறைக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள் கல்வி பெறும் வாய்ப்பை தடுக்கும் ஏற்பாடு நடக்கும். 3 வயதில் குழந்தை களை பள்ளிக்கு அனுப்பி 3 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத வேண் டும். 5 ஆம் வகுப்பில் ஒருபொதுத் தேர்வு, பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி சேர்வதற்கு நீட் போன்ற நுழைவு தேர்வு எழுத வேண் டும் என்று தேசிய கல்விக்கொள்கை சொல்கிறது. தமிழ் , ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் கல்வி கற்றுக் கொள்ளலாம். தேவைப்பட்டால் வேறு மொழிப் பாடத்தையும் படிக்கலாம் என்று சொல்கிறது. ஆனால் தமிழ், ஆங்கிலத்திற்கு ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். இந்திக்கு மட்டும் ஆசிரியர் இருக்கும் நிலை இருக்கும். முன்பெல்லாம் பள்ளிக்கு வராத மாண வர்களை அழைத்து வந்து கல்வி கற் றுக் கொடுப்பார்கள். தற்போது மோடி ஆட்சியில் பள்ளிக்கு வரும் மாணவர் களை திருப்பி அனுப்பும் வேலையை மத்திய அரசு செய்கிறது. மேலும், ஆர்எஸ்எஸ், அமைப்பு குருகுலக்கல்வி, குலக்கல்வி, சமஸ் கிருதத்தை அமல்படுத்த கல்வித் துறைக்கு சம்மந்தமில்லாத ஒரு விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் உருவாக் கிய கல்விக்கொள்கை தான் தேசிய கல்விக்கொள்கை. இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டால் பள்ளிக்கூடங் கள் பஜனைமடம் ஆகிவிடும். மாண வர்களுக்கு தொழிற்கல்வி என்று சொல்கிற குலக்கல்வி தோட்டகலை, தட்டச்சு வேலை, மண்பாண்டம் செய் தல் இந்த வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை உருவாகும். தேசிய கல்விக்கொள்கை மாநில கல்வி உரிமைக்கு எதிரானது. இந்த கொள்கையில் இட ஒதுக்கீடு குறித்து எதுவும் கூறப்படவில்லை. அதனால் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற் படும். 50 சதவிகித கல்லூரிகள் மூடப் படும். கல்வியை ஆர்எஸ்எஸ், கார்ப்பரேட் முதலாளிகளின் கூடார மாக மாறிவிடும். எனவே, இந்த கல் விக்கொள்கைக்கு எதிராக ஒருகோடி கையெழுத்து மக்களிடம் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதற்கு மக்கள் ஆதரவுதர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இப்பிரச்சார கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.இளம்பரிதி, எம்.முத்து, எஸ்.கிரை ஸாமேரி, ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி என்.கந்தசாமி, நல்லம்பள்ளி கே.குப்புசாமி உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.