மே,பாளையம், ஜூன் 24- மேட்டுப்பாளையத்தில் புதிய அரசுகலை அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். முன்னதாக இவ்விழாவிற்கு தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா அழைக் கப்படாததைக் கண்டித்து கல்லூரி முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, தமிழக அரசின் உத்தரவின் பேரில் ரூபாய் 7 கோடியே 97 லட்சம் செலவில் 5.46 ஏக்கர் நிலத்தில் புதிய அரசு கலை அறி வியல் கல்லூரி கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்டுள்ள இக்கல்லூரியில் பதினைந்து வகுப்பறைகள், நான்கு ஆய்வு கூடங்கள், செமினார் ஹால், நூலகம், மாணவர் கூட்டுறவு பண்ட கசாலை, உடற்பயிற்சிக் கூடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள் ளன. இதுவரை மேட்டுப்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசு கல்லூரி இல்லாத நிலையில் இப்புதிய கல்லூரி அமைக்கப்பட்டது, இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. இக்கல்லூரியின் திறப்பு விழா திங் களன்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இப்புதிய கல்லூரி யினைத் திறந்து வைத்தார். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இத்திறப்பு விழா நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப் பினர் ஒ.கே. சின்னராஜ் பங்கேற்று குத்து விளக்கேற்றினார். அவருடன் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
திமுக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், இந்த அரசு நிகழ்ச்சிக்கு தொகுதியின் நாடாளு மன்ற உறுப்பினர் ஆ.ராசா அழைக் கப்படவில்லை. இதனைக் கண்டித்து திறப்புவிழா நிகழ்ச்சியின் போது கல்லூரி முன்பு கோவை மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச் சந்திரன் தலைமையில் திரண்ட திமுகவினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களை உள்ளே அழைத்து கல்லூரி நிர்வாகத் தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானமடையாத திமுக வினர் கல் லூரி வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி நாடாளு மன்ற தொகுதிக்குள் நடைபெற்ற புதிய கல்லூரி திறப்பு விழா அரசு நிகழ்ச்சி யில் தொகுதியின் எம்.பி. புறக்கணிக் கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.