கோவை, பிப். 14- புதிய வாக்காளர்களுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்கள் வெள்ளி யன்று வெளியிட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு டிச.23 ஆம் தேதியன்று கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது, 29,23,897 வாக்காளர்கள் இருந்தனர். அதன் பிறகு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. ஒரு மாதங்களாக சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் சிறப்பு வாக்கா ளர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப் பட்டது. டிச.23 ஆம் தேதி முதல் பிப்.14 ஆம்தேதி வரை நடத்தப் பட்ட இம்முகாம்களில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில், 73 ஆயி ரத்து 910 பேர் புதிய வாக்கா ளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில்,பெரும்வாரியாக 18-19 வயதுடையோர் புதிய வாக்கா ளர்களாக உள்ளனர். குறிப்பாக கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நடத்தப்பட்ட முகாமில் 23 ஆயிரத்து 878 பேர் இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இறந்து போனவர்கள், முகவரி மாற்றம், ஒரே வாக்காளர்கள் பெயர் இருமுறை வந்தது அடிப்படையில் பட்டியலில் 5,824 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இறுதியாக வெள்ளியன்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத் தில் 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
நீலகிரி
இதேபோல், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ. இன்ன சென்ட் திவ்யா இறுதி வாக்கா ளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஆண் வாக்காளர்கள் 2,78,204, பெண் வாக்காளர்கள் 2,98,479 மற்றும் இதரர் 8 பேர் என மொத்தம் 5,76,691 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.