tamilnadu

img

தேசிய மாணவர் படை தினம்: ரத்த தான முகாம்

சேலம், நவ.29- தேசிய மாணவர் படை தினத்தை முன்னிட்டு சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் வியாழனன்று நடை பெற்றது. இந்த  ரத்ததான முகாமை  கல்லூரியின் தாளாளர் ராபர்ட் கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார். இதில்  ராணுவ அதிகாரி கே. ஜெயந்தன்,கல்லூரி முதல்வர் கீதா கென்னடி, தேசிய மாணவர் படை அலுவலர் ஜே.விஜய்பாபு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். ரத்ததான முகாமில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் என்சிசி அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.