தருமபுரி, ஆக. 27- அரூரை அடுத்த எம்.தாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் திங்களன்று தேசிய கண்தான விழா நடை பெற்றது. தேசிய கண் தான இருவார விழா ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை யொட்டி அரூரை அடுத்த எம்.தாதம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் திங்களன்று தேசிய கண்தான விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் ஆ.கோபால் தலைமை வகித்தார். இவ்விழாவில் கண் தானம் செய்யும் வழிமுறைகள், கண் தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், கண் நோய்கள், கண் அறுவைச் சிகிச்சைகள், கண் பாதுகாப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கு.கலைய ரசன் கருத்துரை வழங்கினார். தொழுநோய் மேற் பார்வையாளர் பி.முருகன், பள்ளி ஆசிரியர்கள் ஜி.மாதை யன், ஜெ.சையத்பாஷா, ஜி.முருகன், வி.முருகேசன், எம்.வேடியப்பன், வி.ரஷியா, பி.தங்கம்மாள், ஆர்.கே.யோக மணி, ஏ.சமீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.