tamilnadu

நாமக்கல் ,சேலம் முக்கிய செய்திகள்

லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது செய்து சிறையில் அடைப்பு

நாமக்கல், ஆக.6- நில அபகரிப்பு புகார் தொடர்பாக ரூ.10 ஆயிரம் லஞ்சம்  பெற்ற நாமக்கல் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி  ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.  நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு எலச்சிபாளையம் அருகே கொன்னையார் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் எலச்சிபாளையம் மின்சார வாரியத்தில் பணிபுரி கிறார். இவர் மல்லசமுத்திரம் ஒன்றியம், வண்டிநத்தம் பகுதியில் 1.43 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இந் நிலையில் ஜெய்சங்கர் எங்களை ஏமாற்றி நிலத்தை எழுதி  வாங்கி விட்டதாக புதுச்சத்திரம் ஒன்றியம் அகரம் சின்னத் தம்பி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நில அபகரிப்பு பிரிவுக்கு பரிந்துரை செய்துள்ளார். இந்த புகார் குறித்து,  நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர் ஜெய்சங்கரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது ஜெய்சங்கர் மீது வழக்குப் பதிவு மற்றும் கைது செய்யாமல் இருக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் ஜெய்சங்கர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் ஆலோசனைப்படி ரூ.10 ஆயிரம்  பணம் தருவதாக கூறியுள்ளார்.  இப்பணத்தை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே  ஆண்டகளுர்கேட் பகுதிக்கு வந்து பெற்றுகொள்ளுமாறு  காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனை அழைத்துள்ளார்.  அங்கு வந்து பணம் பெறும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெய்குமார்  தலைமையிலான குழுவினர் உதவி ஆய்வாளர் ராஜேந்தி ரனை கைது செய்தனர். மேலும் ராசிபுரத்தில் உள்ள அவ ரது வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை மேற்கொண்ட னர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

சேலம், ஆக.6- வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட சொக்கனூர் விவசாய பகுதியில் அமைந்துள்ள குளங்களை குடிமராமத்து திட்டத் தின் கீழ் தூர்வாருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு சொக்கனூர் விவ சாய பகுதியில் இரண்டு பழமையான குளங்கள் (கருங்கண்  தோப்பு)  அமைந்துள்ளன. இக்குளங்கள் நீண்டகாலமாக தண்ணீர் இன்றி காணப்படுகிறது. மேலும் சீமைக்கருவேல முட்களால் புதர்மண்டி உள்ளது.   இந்நிலையில் குடிமரா மத்து திட்டத்தின் கீழ் இந்த இரு குளங்களையும் தூர்வாரி,  மழை நீர் சேகரிப்பு முறையில் வடிவமைத்து பயன் பாட்டுக்கு விடும்படி சொக்கனூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த குளங்களும் தூர்வாரி சீர்செய்யப்பட்டு பயன் பாட்டிற்கு வந்தால் சுமார் 500 ஏக்கர் நிலங்களுக்கு விவ சாயம் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் செழித்தோங்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தப் பகுதியில் செயல்படும் பசுமை இந்தியா இயக்கத்தை சேர்ந்த  இளைஞர்கள் இந்தத் திட்டத்திற்காக தங்களது உடல்  உழைப்பை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆகவே,  இந்த இரு குளங்களையும் சீரமைக்க சுமார் மூன்று முதல்  ஐந்து லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு போதுமானது. குடிமரா மத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி இரு குளங்களையும் தூர் வாரி நவீன முறையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சொக்கனூர் பகுதி விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.