tamilnadu

நாமக்கல், கோவை முக்கிய செய்திகள்

கொத்தடிமைகளாக இருந்த மூவர் மீட்பு

நாமக்கல், செப்.20- நாமக்கல் அருகே கோழிப்பண்ணையில் கொத் தடிமையாக இருந்த மூவர் மீட்கப்பட்டுள்ளனர். கருர் மாவட்டம்,  ஜெகதாபி பகுதியைச் சேர்ந்தவர்  தங்கராஜூ (38).  இவரது மனைவி மகேஸ்வரி (34).  இவர்களுக்கு 15 வயதுடைய ஒரு மகள் உள்ளார்.  கடந்த 2011-ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் செட்டித்தோட்டம் என்ற பகுதி யில் உள்ள கோழிப் பண்ணையில் தங்கராஜுவும், மகேஸ்வரியும் பணிக்குச் சேர்ந்தனர். அங்கு, அவர் களுக்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்ட தாக கூறப்படுகிறது.  இதைத்தொடர்ந்து அதிகாலை 4  மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக வேலை வாங்கி வந்ததாகவும்,  ரூ.50 ஆயிரம் வாங்கி யதற்காக,  எட்டு ஆண்டுகளாக எவ்வித ஊதியமின்றி  அவர்கள் கொத்தடிமை முறையில் பணியாற்றி வந்துள்ளனர்.   இதுகுறித்த தகவல் தனியார் தொண்டு நிறுவ னத்துக்குத் தெரியவந்த நிலையில், நாமக்கல் சார்- ஆட்சியர் சு.கிராந்திகுமார் பதியிடம் புகார் அளித் தனர்.  இதனையடுத்து  வியாழனன்று சார்- ஆட்சியர்  மற்றும் மோகனூர் வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா,  தொழிலாளர் துறை ஆய்வாளர் விஜய்,  தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பழனிசாமி மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.  பின்னர் மூன்று பேரையும் மீட்டு,  நாமக்கல் சார்-ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.  இதன்பின் கோழிப் பண்ணை உரிமையாளரை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட மூன்று பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 

மதுபானக் கூடத்தில் வாலிபர் அடித்துக் கொலை - 4 பேர் கைது  

கோவை, செப். 20- மதுபானக்கூடத்தில் அதிக விலைக்கு சிகரெட் விற் பனை செய்ததை எதிர்த்த வாலிபர் அடித்து கொலை செய் யப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுபானக்கூட மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கோவை காந்திபுரம் எதிரே உள்ள நேருவீதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் கடந்த  ஞாயிறன்று மது அருந்திய வாலிபர் ஒருவர் பாரில் உள்ள  கடையில் சிகரெட் வாங்கியுள்ளார். ஆனால், சிகரெட் விலையை காட்டிலும் கூடுதலாக ரூ.5 மதுக்கூட ஊழியர்கள்  கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மதுக்கூடத்தில் வேலை செய்யக் கூடியவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கூட மேலாளர் கௌதம் என்பவர் இரும்பு கம்பியை எடுத்து அவரது தலையில் சரமாரியாக தாக்கி வெளியே தூக்கி வந்து போட்டு விட்டு சென்றுள்ளனர்.  இதுகுறித்து அங்கிருந்த சிலர் கோவை காந்திபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனை யடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால், சிகிச்சை பலனில்லாமல் திங்களன்று வாலிபர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வாலிபரின் பிரேத  பரிசோதனை அறிக்கையை வியாழனன்று காவல் துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி யுள்ளது. இவ்வறிக்கையில் கூர்மையான ஆயுதம் கொண்டு தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய உதவி ஆணையர் கார்த்தி கேயன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் கணேஷ் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் டாஸ்மாக் மது பான கடையின் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இதில் மேலாளர் கெளதம் மற்றும் அங்கு  வேலை செய்பவர்களால் கொடூரமாக தாக்கிய காட்சி பதி வாகி இருந்தது.  இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுக்கூட மேலாளர் கௌதம் (26), கிரி (29), வினோத் (26) மற்றும் திருப்பூரைச் சேர்ந்த பாபு என்கிற சியான் (46) ஆகி யோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்,  இறந்த வாலிபர் யார், எந்த ஊர் என்பது போன்ற விபரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டு வரு கின்றனர்.

மின் தடை

நாமக்கல், செப்.20- பரமத்தி வேலூர் துணை  மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பரா மரிப்பு பணியின் காரண மாக சனியன்று (செப்.21) காலை 9 மணி முதல் மாலை  5 மணிவரைபரமத்தி வேலூர், நல்லியாம் பாளையம், பொத்தனூர், வி.சூரியாம்பாளையம்,  வீரணம்பாளையம்,  கோப்பணம்பாளையம்  ஆகிய பகுதிகளில் மின்  விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.