ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் மோடி அரசைக் கண்டித்து கோவை போத்தனூர் ரயில் நிலையம் முன்பு டிஆர்இயூ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டிஆர்இயூ மாநில உதவி செயலாளர் முருகேசன், கோட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.