வணிகர் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, நவ.22- மொரப்பூர், திப்பம்பட்டி பேருந்து நிலையத்திலுள்ள அரசு வணிக வளாகத்தில் கடைகள் முறை கேடாக ஒதுக்கீடு செய்ததை கண்டித்து வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெள்ளியன்று மொ ரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மொரப்பூர் பேருந்து நிலைய வளாகத்தில் 2015- 16ஆம் நிதி ஆண்டில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் 18 கடைகள் உள்ளன. இதே போல்,திப்பம்பட்டி கூட்டு சாலையில் உள்ள பேருந்து நிலை யத்தில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகத்தில் 27 கடைகள் கட்டப்பட்டன. இந்நிலையில் கடைகளின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து ஓராண்டு ஆகிறது. ஆனால் கடைகள் வாடகைக்கு விடப்படவில்லை. மொரப்பூர் மற்றும் திப்பம்பட்டி பேருந்து நிலையத்திலுள்ள கடை கள் ஏலம் விடுவதாக இருமுறை அறிவிப்புகள் வெளியிடப்பட்ட பிறகு, அந்த அறிவிப்புகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில், நாளிதழ்களில் எவ்வித அறிவிப்புகளும் வெளி யிடாமல், மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ஆளும் கட்சியினருக்கு மறைமுகமாக வணிக வளாகங்களில் உள்ள கடைகளை ஒதுக்கீடு செய்துள் ளனர்.இதனால் சிறு வியாபாரி கள், வணிகர்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். மொரப்பூர் மற்றும் திப்பம்பட்டி பேருந்து நிலையத்திலுள்ள கடை களை வெளிப்படையான முறையில் ஏலம் நடத்தி, வணிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மொரப்பூர், திப்பம்பட்டி கூட்டுசாலை பகுதி யைச் சேர்ந்த வணிகர்கள் உள் ளிட்ட பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.