காஞ்சிபுரம், அக். 11- சென்னையில் இருந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (அக்.11) அமிலம் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று சென்றது. இந்த வேன் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள சின்னையன்சத்திரம் பகுதி யில் செல்லும்போது முன்னால் சென்ற வாக னத்தை முந்த முயலும் போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த சுமார் 50 அமிலக் கேன்கள் மற்றும் அமிலப் பொட்ட லங்கள் சாலையில் சிதறின. கேன்களில் இருப்பது ஆபத்தான அமிலமோ என்ற அச்சம் அப் பகுதியில் நில வியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவ பயன்பாட்டுக்கான அமிலம் என்று தெரிந்ததும் அந்தப் பகுதியில் பரபரப்பு குறைந் தது. கவிழ்ந்த வாகனத்தினை ஓட்டிச்சென்ற கணேசன் வயது 30 லேசான காயமும் அவரது மனைவி மகாலட்சு மிக்கு வயது 27 பலத்த காயம் ஏற்பட்டது. அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வாலாஜாபாத் காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர்.